அரியாலை நெடுங்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு குடும்பத்தலைவர் சாவு :– இன்றிரவு துயரம்

ஆசிரியர் - Admin
அரியாலை நெடுங்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு குடும்பத்தலைவர் சாவு :– இன்றிரவு துயரம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்தார். .

இந்தச் யாழ்ப்பாணம் நெடுங்குளம் பகுதியில் இன்றிரவு 7.20 மணியளவில் இடம்பெற்றது.

அதே இடத்தைச் சேர்ந்த தயா என அழைக்கப்படும் 55 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இன்று (02)  இரவு 7 மணியளவில் புறப்பட்ட இரவு தபால் சேவை தொடருந்து அரியாலை ப தாண்டிப் பயணித்துக்கொண்டிருந்த போது, பொதுமக்கள் பாவனைக்குட்படுத்தப்படாத புகையிரத கடவையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது எனப் பொலிஸார் கூறினர்.

சீவல் தொழில் செய்யும் குடும்பத்தலைவர் தனது சிறு மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த போது, தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு