வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சுகிர்தன் தெரிவு!

ஆசிரியர் - Admin
வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சுகிர்தன் தெரிவு!

வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளராக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட சோமசுந்தரம் சுகிர்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை சபையின் மதவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் சோ.சுகிர்தனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தாயுமானவன் நிகேதனும் தவிசாளர் பதவிக்காக பிரேரிக்கப்பட்டனர்.

இதையடுத்து, பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சோ.சுகிர்தனுக்கு 30 வாக்குகளும், தா.நிகேதனுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி , ஐக்கிய தேசியக்கட்சி என்பன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரை ஆதரித்தன. ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் ஒருவர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணியின் 2 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். இதையயடுத்து, உப தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பொன்னம்பலம் இராஜேந்திரம் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

வலி.வடக்கு பிரதேச சபையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 17 ஆசனங்களையும், ஈபிடிபி 8 ஆசனங்களையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 6 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி , மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா 2 ஆசனங்களையும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு