வலி.தென்மேற்கு சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து சென்ற ஜெபநேசன் தவிசாளராக தெரிவு!

ஆசிரியர் - Admin
வலி.தென்மேற்கு சபையின் தலைவர் பதவியை ராஜினாமா செய்து சென்ற ஜெபநேசன் தவிசாளராக தெரிவு!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசனை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் வழிமொழிந்த சம்பவம் இன்று இடம்பெற்றது. வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் உபதவிசாளர் தெரிவும் இன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த வலி.தென்மேற்கு பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் மீண்டும் தவிசாளராக இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

அவருடைய பெயரை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் முன்மொழிய, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் வழிமொழிந்துள்ளார். உபதவிசாளராக சின்னையா கணேசவேல் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னராகவும் குறித்த பிரதேசசபையின் தலைவராக அவர் இருந்திருந்த போதும் அப்போது இடம்பெற்ற பாரிய குத்துவெட்டுக்களினால் அவர் ஒரு கட்டத்தில் தனது பதவியை ராஜினாமா செய்து அரசியலே வேண்டாமென்று ஒதுங்கியிருந்தார்.

எனினும் சுமந்திரன் மற்றும் சரவணபவனின் ஆதரவுடன் தேர்தல் களம்புகுந்திருந்த அந்தோணிப்பிள்ளை ஜெபநேசன் தற்போது ஈபிடிபி மற்றும் தென்னிலங்கை கட்சிகளது ஆதரவோடு ஆட்சிக்கதிரையேறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு