கடும் வெப்பத்திற்குப் பின் யாழில் பலத்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்

ஆசிரியர் - Admin
கடும் வெப்பத்திற்குப் பின் யாழில் பலத்த மழை: மகிழ்ச்சியில் மக்கள்

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை (02) பெரும் இடிமுழக்கத்துடன் பலத்த மழை பெய்துள்ளது.

இன்று பிற்பகல்-02 மணிக்கு யாழ். மாவட்டத்தின் வலிகாமம் பகுதி உட்படப் பல பகுதிகளிலும் ஆரம்பமான மழைவீழ்ச்சி சுமார் அரைமணித்தியாலத்திற்கும் மேலாக நீடித்துள்ளது.

தற்போது மழை ஓய்வடைந்த நிலையில் தொடர்ந்தும் மப்பும் மந்தாரமுமான காலநிலை நிலவுகிறது.

இதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகலும் யாழின் பல பகுதிகளிலும் கடும் மழை பெய்துள்ளது. கடும்மழையுடன் பலத்த காற்றும் வீசியமையால் மரங்கள் முறிவடைந்து வீழ்ந்துள்ளன.

குடாநாட்டில் கடந்த பல நாட்களாக கடும் வெப்பமுடனான காலநிலை நிலவியது. இதன் காரணமாக அடிக்கடி மக்கள் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் இன்றும் நேற்றும் பெய்துள்ள மழையால் வெப்பம் சற்றுத் தணிவடைந்துள்ளது. திடீர் மழை காரணமாக யாழ். விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு