வெட்டு காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
வடமராட்சி கிழக்கு, அம்பன் - குடத்தனையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது தாயார் வெட்டுக்காயங்களுடன் நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.
"அந்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்தனர். கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்தக் கொடூரச் செயலைச் செய்திருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது" என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லதம்பி தேவகி (வயது- 58) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டார். அவரது தாயார் நல்லதம்பி செல்லம்மா (வயது 76) படுகாயமடைந்த நிலையி்ல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.