யாழ்.நகரில் மீன் சந்தைக்கு அருகில் இளைஞர்களுக்கு இடையில் குழு மோதல்!
யாழ்.நகரில் மீன் சந்தைக்கு அருகில் இளைஞர்களுக்கு இடையில் இன்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு இளைஞர்கள் மது போதையில் இருந்தனர். இதன்போதே இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.