நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார் சுரேஸ் பிறேமச்சந்திரன்; முன்னாள் போராளிகள்! VIDEO

ஆசிரியர் - Admin
நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார் சுரேஸ் பிறேமச்சந்திரன்; முன்னாள் போராளிகள்! VIDEO

போராளிகளினது தியாகத்தை மதிப்பதற்கு சுரேஸ்பிறேமச்சந்திரன்,வீ.ஆனந்தசங்கரி முன்வரவேண்டுமென புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவ்வமைப்பின் பிரதிநிதிகள் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் வெற்றி பெற்றிருந்த தமது முதுகில் குத்தி ஈபிஆர்எல்எவ் கட்சி தமக்கு கிடைத்த ஆசனங்களை பெற்றுவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் தாம் தமிழர் விடுதலைக்கூட்டணியின் கீழ் போட்டியிட்ட தமது கட்சி மூதூர் பகுதியின் சம்பூர் மற்றும் பண்டிக்குடியிருப்பு பகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமக்கான ஆசனங்களை தன்னிச்சையாக ஈபிஆர்எல்எவ் கட்சி தலைவர் சுரேஸ்பிறேமச்சந்திரன் பறித்து கொண்டு தமது கட்சிக்கு வழங்கியதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக தாம் பேச முற்பட்ட போது ஈபிஆர்எல்எவ் கட்சி தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரனோ,வீ.ஆனந்தசங்கரியோ தயாராக இருக்கவில்லையெனவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஏந்தவொரு நிதி உதவியோ ஆதரவோ அற்று பசி பட்டினியோடு மக்களிடம் பிரச்சாரங்களினை செய்து போராளிகள் என்ற அங்கீகாரத்துடனேயே வாக்குகள் எங்களிற்கு கிடைத்தது.

ஆனால் அதனை பொருட்படுத்தாது தமது கட்சியான றமேஸ் என்பவருக்கு வழங்கியமையினை கண்டித்ததுடன் மக்கள் தந்த அங்கீகாரத்தை தமக்கு வழங்க மறுத்ததை கண்டித்துள்ளதுடன் தாம் இனி தொடர்ந்தும் தமிழர் விடுதலைக்கூட்டணியுடன் இணைந்து செயற்படப்போவதில்லையெனவும் இனி தனித்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு