தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி ஆட்சியமைக்க உதவிய உறுப்பினர்களை நீக்கும் ஆனந்தசங்கரி!

ஆசிரியர் - Admin
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி ஆட்சியமைக்க உதவிய உறுப்பினர்களை நீக்கும் ஆனந்தசங்கரி!

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க வாக்களித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதேச சபை உறுப்பினர்களைக் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டிருந்தது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட குறித்த கட்சிகளின் சார்பில் உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஒருபோதும் உதவக் கூடாது எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கண்டிப்பான உத்தரவு பிறப்பித்திருந்தார்.

எனினும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபையிலும், யாழ். மாவட்டத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேசசபையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிமைக்க உதவினர்.

யாழ். மாவட்டத்தில் வேலணைப் பிரதேச சபையில் மகிந்த ராஜபக்ஷவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியின் உதவியுடன் ஈ.பி.டி.பி ஆட்சியமைப்பதற்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர்கள் ஆதரவு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் திருக்கோவில் மற்றும் வலி.தெற்குப் பிரதேச சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க உதவிய தமிழர் விடுதலைக் கூட்டணியினரைக் கட்சியிலிருந்தும், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு