யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள்

ஆசிரியர் - Admin
யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள்

மின்சாரத் தொகுதிப் பாரமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(31) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்பிரகாரம், நாளை காலை-08 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் வலந்தலைச் சந்தி, சிவகாமி அம்மன் கோவிலடி, மருதபுரம், வியாவில், கருங்காலி, காரைநகர்ச் சிவன் கோவிலடி, பொன்னாலை கிருஷ்ணன் கோவிலடி, பொன்னாலை வீட்டுத் திட்டம், பொன்னாலை கூல்மென் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு