புதுவருடத்தில் அப்பாவை காண ஆவலாக இருக்கிறோம்..
அப்பாவை விடுதலை செய்வதாக கூறிய ஜனாதிபதி மாமாவுக்கு நன்றிகள். புதுவருடத்தில் அப்பாவை காண ஆவலாக இருக்கிறோம்.
மேற்கண்டவாறு தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் இன்று தெரிவித்திருக்கின்றார்கள்.
யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர்.
இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில், நேற்று முன்தினம் ஜனாதிபதியை சந்தித்து ஆனந்த சுதாகரைன விடுதலை செய்யும்படி கேட்டுள்ளோம்.
பிள்ளைகளுடன் ஆவலாக உரையாடிய ஜனாதிபதி சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக விடுதலை செய்வதாக கூறியிருக்கின்றார்.
இந்நிலையில் ஜனாதிபதி மாமாவுக்கு எங்களுடைய நன்றிகள். அப்பாவின் விடுதலைக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகள்,
சித்திரை புத்தாண்டுக்கு முன்னதாக அப்பாவின் வருகையை பார்திருக்கின்றோம். என ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் கூறியுள்ளனர்.