இரா.சம்மந்தன் அரசுக்கு வாக்காளத்து வாங்குகிறார்.

ஆசிரியர் - Editor I
இரா.சம்மந்தன் அரசுக்கு வாக்காளத்து வாங்குகிறார்.

தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இரா.சம்மந்தன் அரசாங்கத்திற்கு ஆரவாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். என பொது எதிரணியின் முக்கியஸ்த்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார். 

இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த வாசுதேவ நாணயக்கார நல்லூர் ஆலயத்தில் வ ழிபாட்டை நடத்தினார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், மைத்திரி- ரணில் கூட்டரசாங்கத்தினால் இரா.சம்மந்தன் எதிர்கட்சி தலைவராக நிய மிக்கப்பட்டிருக்கின்றார். அதற்கு நன்றிக்கடனாக சம்மந்தன் பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். 

தமிழ் மக்கள் அதனை ஏற்றுக் கொள்ளாதபோதும் இரா.சம்மந்தன் அரசாங்கத்திற்கே வேலை செய்து கொண்டிருக்கின்றார். 

மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மும்முனை தாக்குதல்கள் நடக்கின்றன. அவருடைய தவறான செயற்ப hடுகள் காரணமாக ஐ.தே.கட்சியும், பொது எதிரணியும், அரசின் கட்சியும் அவருக்கு எதிராக மாறியுள்ளன என்றார். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு