யாழில் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் போராட்டம்

ஆசிரியர் - Admin
யாழில் வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் போராட்டம்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி நடாத்தி வரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமையுடன்(30) 400 ஆவது நாளை எட்டியுள்ளது.

தமது தொடர்ச்சியான 400 நாள் போராட்டத்தினை வெளிப்படுத்தும் முகமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் யாழ் வருகை தந்தனர்.

யாழ். வருகை தந்த அவர்கள் வடமாகாண சபையின் பேரவைச் செயலகத்திற்கு முன்பாக அடையாள கண்டனப் போராட்டமொன்றினை நடாத்தியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு