மணியந்தோட்டம் பகுதியில் பொலிஸ் சோதனைச் சாவடி தீக்கிரை
யாழ்ப்பாணம் பொலிஸாரால் மணியந்தோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பொலிஸ் சோதனை சாவடி நேற்று (28) இரவு இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில், மணல் கடத்தல், களவு, போதைப்பொருள் வியாபாரம் என்பன அதிகமாக இடம்பெறுகின்றன.
இதனைத்தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணம் பொலிஸாரால், சோதனை சாவடி ஒன்று அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனைச்சாவடியில் நிரந்தரமாக பொலிஸார் தங்கி நிற்பதில்லை.
இந்நிலையில் நேற்று (28) இரவு குறித்த சோதனைச்சாவடி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.