சுருட்டுப் பற்ற வைத்த தீயால் விபரீதம்: உடுப்பிட்டி வயோதிபப் பெண் மரணம்

ஆசிரியர் - Admin
சுருட்டுப் பற்ற வைத்த தீயால் விபரீதம்: உடுப்பிட்டி வயோதிபப் பெண் மரணம்

கைவிளக்கில் சுருட்டுப் பற்ற வைத்த யாழ். உடுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்மணி தீக்காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

இந்த வருட சிவராத்திரி தினத்தன்று குப்பி விளக்கில் குறித்த வயோதிபப் பெண்மணி சுருட்டுப் பற்ற வைத்துள்ளார். இதன் போது குப்பி விளக்குத் தவறுதலாக அருகிலிருந்த சாக்கின் மேல் வீழ்ந்ததில் சாக்குத் தீப்பற்றியுள்ளது.

தீப்பற்றிய சாக்கிலிருந்து தீயை அணைப்பதற்கு சாக்கை உதறியுள்ளார். அப்போது அந்தச் சாக்கு குறித்த வயோதிபப் பெண்மணியின் நெஞ்சின் மேல் மீது வீழ்ந்து எரிந்துள்ளது. குறித்த சம்பவத்தில் காயமடைந்த அவர் சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் பல நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம்(27) அம்மையார் உயிரிழந்துள்ளார்.

யாழ். உடுப்பிட்டி இமையாணன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மார்க்கண்டு யோகம்மா(வயது-76) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு