உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக கொள்கையை கைவிட்டு விட்டது கூட்டமைப்பு! - விக்னேஸ்வரன்

ஆசிரியர் - Admin
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக கொள்கையை கைவிட்டு விட்டது கூட்டமைப்பு! - விக்னேஸ்வரன்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்காக, ஈ.பி.டி.பி.யின் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, பெற்றுக் கொண்டமை சுயநலத்திற்காக கூட்டமைப்பு கொள்கையை கைவிட்டு விட்டது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கந்தர்மடம், அரசடி வீதியில் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களில் ஈ.பி.டி.பி.யுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்குப் பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஈ.பி.டி.பி.யுடன் தாங்கள் பேரம் பேசவில்லை என்றும், ஈ.பி.டி.பி. தமக்கு நேரடியாக ஆதரவு தரவில்லை என்றும் ஊடகங்களுக்கு கூறியுள்ளார். ஆனால் என்னதாக இருந்தாலும் ஒருமித்து நியமனங்கள் நடைபெறவில்லை என்று தெரிகின்றது. பதவி வகிக்கின்றவர்கள் ஆட்சியை சரியான முறையில் கொண்டு நடத்த வேண்டும்.

சாவகச்சேரி நகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு, ஈ.பி.டி.பி.யின் ஆதரவு வழங்கியது என்பது தொடர்பில் சரியாக நான் அறியவில்லை. என்னவாக இருந்தாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆதரவுடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியை அமைத்தால், கூட்டமைப்புக் கொள்கைகளை கைவிட்டு சுயநலங்கள் தான் எமக்கு முக்கியம் என்ற கருத்து ஏற்படும் என்பதுதான் என்னுடைய அவதானிப்பாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு