மட்டுவிலில் வழிபாட்டிற்குச் சென்ற குடும்பப் பெண்மணிக்கு ஏற்பட்ட நிலை!
பிரசித்திபெற்ற யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்குப் பங்குனித் திங்கள் வழிபாட்டிற்காக மோட்டார்ச் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குடும்பப் பெண்ணொருவர் வீதியில் சறுக்கி விழுந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை(26) அதிகாலை-05 மணியளவில் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அதேபகுதியைச் சேர்ந்த 53 வயாதான குடும்பப் பெண்மணியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.