சாவகச்சேரி நகரசபை த.தே.கூட்டமைப்பிடம். VIDEO
ஈ.பி.டீ.பி மற்றும் பல கட்சிகளின் பகிரங்க ஆதரவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு சாவகச்சேரி நகரசபை ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
தமிழ்தேசிய கூட்டமைப்பு சார்பில் திருமதி இ.சிவமங்கை மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் அ.மயூரன் ஆகியோர் தவிசாளர் தெரிவுக்காக போட்டியிட்டிருந்த நிலையில் பகிரங்க வாக்களிப்பு நடத்தப்பபட்டது.
இதன் போது 12 வாக்குகள் பெற்று இ.சிவமங்கை தவிசாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே சமயம் தமிழ்தேசிய மக்கள் முன்னணி 6 வாக்குள் பெற்றது. தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஈ.பி.டி.பி மற்றும் அரச கட்சிகள் ஆதரவு வழங்கின.