சர்வமத தலைவர்களிடம் ஆசி பெற்றார் மேயர் ஆனோல்ட்
யாழ்.மாநகரசபை மேயராக பதவியேற்றுள் ள இமாணுவேல் ஆனோல்ட் சர்வமத தலைவர்களை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு யாழ்.மாநகர மே யர் மற்றும் பிரதி மேயருக்கான தேர்வு இடம் பெற்றது. இதன்போது 1ம் கட்ட இரகசிய வாக்கெடுப்பில் 18 வாக்குகள் பெற்று 2ம் கட்ட வாக்கெடுப்பில் ஈ.பி.டி.பி விலகியதைத் தொடர்ந்து மாநகர மேயராக ஆனோல்ட் நியமிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று நண்பகல் நல்லை ஆதீன முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற ஆனோல்ட், யாழ்.மறைமாவட்ட ஆயர் மற்றும் ஆரியகுளம் நாகவிகாரைக்கும் இஸ்லாமிய பள்ளிவாசலுக்கும் சென்று ஆசிகளை பெற்று கொண்டார்.