யாழ்.மாநகரசபை மேயராக இ. ஆனோல்ட் நியமனம்.

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை மேயராக இ. ஆனோல்ட் நியமனம்.

யாழ்.மாநகரசபை மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதி மேயராக து.ஈசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மாநகரசபை ஆட்சியமைப்பதற்கான 1வது அமர்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. இதன் போது தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன இரகசிய வாக்கெடுப்பை கோரியிருந்தன.

இதற்கமைய இரகசிய வாக்கெடுப்பு நடை பெற்றிருந்த போது தமிழ்தேசிய கூட்டமைப்பு 18 வாக்குகளையும், தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன 13 வாக்குகளையும் பெற்றிருந்தன.

இதனை தொடர்ந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணி சார்பில் பிரேரிக்கப்பட்ட விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஈ.பி.டி.பி சா ர்பில் பிரேரிக்கப்பட்ட மு.றமீடியஸ் ஆகிய இருவரில் ஒருவரை நீக்குவதற்காக குலுக்கல் முறையில் ஒரு தேர்வு நடத்தப்பட்டது.

இதில் வி.மணிவண்ணன் நீக்கப்பட்டு மீண் டும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பவிருந் த நிலையில் ஈ.பி.டி.பி போட்டியில் இருந்து தாமாக நீக்குவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து மேயராக இமானுவேல் ஆனோல்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.








பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு