சாவகச்சேரி பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

ஆசிரியர் - Admin
சாவகச்சேரி பகுதியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் மற்றும் சாவகச்சேரி பொலிசார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் யாழ் சாவகச்சேரி பகுதியில் வைத்து கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து எட்டு கிலோ கஞ்சாவையும் பொலிசார் மீட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கஞ்சாவை விற்பனை செய்யும் நோக்கில் கடத்திச் சென்ற நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கடத்தலிற்கு பயன்படுத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் ஒன்றும் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் அல்வாய் பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாகவும், விசாரணையின் பின்னர் குறித்த இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு