யாழ் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள ஜிப்சம் விற்பனை கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!

ஆசிரியர் - Admin
யாழ் காங்கேசந்துறை பிரதான வீதி அமைந்துள்ள ஜிப்சம் விற்பனை கடை மீது பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாண நகரில், முட்டாஸ் கடைச் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையம் மீது இன்று மாலை இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். தகடுகள் விற்பனை செய்யும் நிலையமே தாக்குதலுக்குள்ளாகியது. 

இன்று மாலை 7.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும் கற்களை வீசிச் சென்றுள்ளனர்.

இதனால் குறித்த கடையின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளதுடன் கடை பெற்றோல் குண்டு வெடித்தனால் சிறிதளவு சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பில் அந்த நிலையத்தைச் சூழவுள்ள வியாபார நிலையங்களின் சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகளைக் கைது செய்வது கடினமல்ல என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு