80 இலட்சம் ரூபா மோசடி - தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

ஆசிரியர் - Admin
80 இலட்சம் ரூபா மோசடி - தனியார் பாதுகாப்பு நிறுவன அதிகாரிகளுக்கு விளக்கமறியல்!

வங்கியின் 80 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் 5 பேரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. 

அநுராதபுரம் பகுதியில் இயங்குகின்ற தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்று யாழ்ப்பாணத்திலுள்ள வங்கிகளின் ஏ.ரி.எம் நிலையங்களுக்கு பணத்தை கொண்டு சென்று விநியோகம் செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றது.

கடந்த 9ஆம் திகதி அநுராதபுரத்திலிருந்து 11 கோடியே 74 இலட்சம் ரூபா பணத்தை 5 பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் இந்த நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. 

உடுவில் பகுதிக்கு வந்து பணத்தை சரி பார்த்தபோது அதில் 80 இலட்சம் ரூபா பணம் குறைவடைந்து காணப்பட்டது. இதனையடுத்து வாகனத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக வந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களது விளக்கமறியலை நீடிக்குமாறே நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு