சாவகச்சேரியில் கத்திக் குத்தில் இளைஞன் படுகாயம்:குடும்பஸ்தர் பொலிஸில் சரண்
யாழ். சாவகச்சேரி நகரப் பகுதியிலுள்ள பேருந்து நிலையத்தில் நின்ற இளைஞன் மீது இன்றைய தினம்(23) பட்டப் பகல் வேளையில் சரமாரிக் கத்திக் குத்துத் தாக்குதல் நடாத்தப்பட்டதில் அவர் படுகாயங்களுக்கான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது யாழ். மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் சாவகச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட வவுனியாவைச் சேர்ந்த குடும்பஸ்தர் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.