நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு..! மிக இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்..

ஆசிரியர் - Editor I
நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு..! மிக இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுங்கள்..

இலங்கையில் கொரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை முறையாக பின்பற்றி நடக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். 

கொரோனா வைரஸ் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக கடந்த ஆண்டு ஒக்டோபர் 31 முதல் நேற்று வரையான காலப் பகுதியில் 3,391 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கையினை பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுப்பர். 

புத்தாண்டு காலப் பகுதியில் வர்த்தக நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளமையினால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அத்துடன் முகக் கவசங்களையும். சமூக இடைவெளியையும் அவசியம் பராமறிக்க வேண்டும் 

என்றும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு