அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்..! நியமன கடிதங்கள் வருகிறது..

ஆசிரியர் - Editor I
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்..! நியமன கடிதங்கள் வருகிறது..

கடந்த ஆட்சிக்காலத்தில் அரச சேவையில் இணைக்கப்பட்ட 14 ஆயிரம் பட்டதாரிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இன்று தொடக்கம் பொதுச்சேவையில் நிரந்தர நியமனத்தை பெறவுள்ளனர். 

அனைத்து நியமனக் கடிதங்களையும் இன்று முதல் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலக அலுவலகங்கள் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

பட்டதாரிகள் குறித்த பட்டியலை www.pubad.lk எனும் தளத்தில் பார்வையிடலாம்.தெரிவாகும் பட்டதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் 1 முதல் சம்பந்தப்பட்ட பணியிடங்களில் தொழில் புரிவதாக 

அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பொதுச் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு