யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் விபத்தில் சிக்கி ஏழாலை குடும்பஸ்தர் படுகாயம்

ஆசிரியர் - Admin
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் விபத்தில் சிக்கி ஏழாலை குடும்பஸ்தர் படுகாயம்

யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் பட்டா வாகனமொன்றில் மரக்கறிகளை ஏற்றிச் சென்ற வாகனத்துடன் வேறொரு பட்டா வாகனம் மோதியதில் குறித்த வாகனத்தைச் செலுத்திச் சென்ற ஏழாலையைச் சேர்ந்த குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் இன்று வியாழக்கிழமை(22) காலை- 7:30 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேற்படி விபத்துச் சம்பவத்தில் ஏழாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 40 வயதான கனகரத்தினம் இரங்கநாதன் என்பவரே படுகாயமடைந்தவராவார். 

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு