யாழில் திருமண வீட்டில் விசித்திரத் திருட்டு

ஆசிரியர் - Admin
யாழில் திருமண வீட்டில் விசித்திரத் திருட்டு

யாழ். குப்பிளான் தெற்குப் பகுதியில் திருமண நிகழ்வு நடைபெற்ற வீடொன்றில் திங்கட்கிழமை(19) இரவு விசித்திரத் திருட்டு இடம்பெற்றுள்ளது.

குப்பிளான் பகுதியைச் சேர்ந்த மணமகனுக்கும், பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மணமகளுக்கும் பெரியோர்கள் திருமணம் நிச்சயித்திருந்த நிலையில் திங்கடகிழமை முற்பகல் சுபவேளையில் சுழிபுரத்திலுள்ள ஆலய மண்டபமொன்றில் திருமண நிகழ்வு சிறப்பாக நடந்தேறியது.

குறித்த திருமண நிகழ்வு பெருமளவானோர்களின் பங்களிப்புடன் நடைபெற்ற நிலையில் திருமண நிகழ்வின் போது மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள், அயலவர்கள் திருமணப் பரிசாக வழங்கிய பெருந்தொகைப் பணம் குப்பிளானிலுள்ள மணமகளின் வீட்டிலுள்ள சுவாமி அறையில் பையொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இனம் தெரியாதோர் குறித்த பணத்தை முழுமையாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

மணமக்கள் உள்ளிட்டோர் திருமண நிகழ்வில் பங்கேற்ற அசதியிலிருந்த வேளையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. குறித்த வீட்டில் பெறுமதியான வேறு பொருட்கள் காணப்பட்ட போதும் திருமணத்தில் சேர்ந்த பணத்தை மாத்திரம் கொள்ளையடித்துச் சென்றமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு