சாவகச்சேரியில் விபத்தில் சிக்கிய இளைஞனுக்கு நேர்ந்த கதி
யாழ். சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் சிக்கி இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (20) இரவு- 10:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்ட இளைஞன் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.