வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பகுதியில் தொடர் கொள்ளை: புத்தளத்தை சேர்ந்த 3 பேர் கைது!

ஆசிரியர் - Admin
வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பகுதியில் தொடர் கொள்ளை: புத்தளத்தை சேர்ந்த 3 பேர் கைது!

வல்வெட்டித்துறை - உடுப்பிட்டி பகுதியில் தொடர்ச்சியாக 3 வீடுகளில் திருடிய கும்பல் நான்காவது வீட்டினை உடைத்து திருட முற்பட்ட வேளை அப் பகுதி மக்களினால் திருட்டுக் கும்பல் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இருப்பினும் சம்பவ இடத்தில் இருந்து 3 திருடர்கள் தப்பிச் சென்ற நிலையில் ஒருவர் மக்களிடம் வசமாக மாட்டியுள்ளார். மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டவர் வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

மக்களால் பிடிக்கப்பட்டுவர் மண்கும்பான் சாட்டிப் பிரதேசத்தினை சேர்ந்தவர் என்று வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற 3 பேரும் சாவகச்சேரி பகுதியில் வைத்து அப்பகுதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் புத்தளம் கற்பிட்டி பகுதியினை சேர்ந்த 24 வயதுடைய நபர்கள் என பொலிஸார் கூறினர். மேலும் உடுப்பிட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருடிய பொருட்களான  2 கைபேசிகள், 3 சோடி கால்கொழுசு, 2 சொனி கமரா, மற்றும் கட்டார் றியால் பணம் என்பவையும் கைபெற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட  நபர் மேலதிக விசாரணைகளுக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு