ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை விவகாரம் சந்தேக நபர்கள் ஏப்ரல் 2ஆம் திகதி வரை விளக்கமறியல்..
ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியால் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இன்றைய தினம் வழக்கு விசாரணையின் போது ஆரம்பதில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணையில் தாமதம் காணப்படுவது தொடர்பாக சட்டத்தரணி ஷாலினி மன்றை வினவியிருந்தார்.
இதற்கு பதிழலித்த நீதிவான், இவ் வழக்கின் விசாரணையை ஆரம்பிப்பதற்கான அறிவுறுத்தல்களை தாம் அனுப்பியுள்ளதாகவும் விரைவில் விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் ஆரம்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.
குறித்த வழக்கின் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக மன்று தெரிவித்துள்ள நிலையில்.
குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அதுவரை குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.