காங்கேசன்துறையில் நடைபெற்ற பொலிஸ் வீரர் தினம்.

ஆசிரியர் - Admin
காங்கேசன்துறையில் நடைபெற்ற பொலிஸ் வீரர் தினம்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் இன்று(21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நினைவு கூறப்பட்டது.

இதன் போது கடந்த காலத்தில் உயிர்நீத்த பொலிஸ் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் ஆகியோர்களின் உறவினர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் காங்கேச்துறை பிராந்தியத்திற்கு உட்பட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் சிசிர குமார ஹேரத், மற்றும் பிரியந்த ஆகியோர் உட்பட காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் உள்ளடங்கும் பலாலி, அச்சுவேலி, இளவாலை, தெல்லிப்ளை, காங்கேசன்துறை, நெல்லியடி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, ஆகிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சக பொலிஸ் உத்தியோகத்தர்கள், ஒய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு