சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மாதிரி வீட்டுத்திட்டம்
தேசிய வீட்மைப்பு அதிகார சபையால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக 197 பயனாளிகளுக்கான மாதிரி வீட்டுத் திட் டம் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக 98.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய வீடமைப்பு அதிகார சபையால் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான முன்மொழிவு ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
அதற்கு எதுவித ஆட்சேபமும் தெரிவிக்கப்படாததால் இந்தத் திட்டத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதில் போரால் பாதிக்கப்பட்டவர்கள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்றார்.