வலிகாமத்தில் இடைநிறுத்தப்பட்ட வீதி விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

ஆசிரியர் - Admin
வலிகாமத்தில் இடைநிறுத்தப்பட்ட வீதி விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்

வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் இருபது இலட்சம் ரூபா பெறுமதியான வீதி விளக்குகளை யாழ்.வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்குப் பிரதேசசபை எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் வழங்கியுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீதி விளக்குகளைப் பொருத்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ் வலிகாமம் தெற்குப் பிரதேசசபைக்குட்பட்ட சுன்னாகம் சூராவத்தைப் பகுதியில் மீளப் பொருத்தும் நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை(19) காலை- 09 மணியளவில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் சார்பாக வலி.தெற்குப் பிரதேச சபை வேட்பாளரான சுன்னாகம் ப.நோ.கூ சங்க தொழிற்சங்கத்தலைவர் செல்வகாந்தன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இந்த விசேட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரு பிரதேசசபைகளையும் சேர்ந்த வீதிகளுக்கு சுமார் 600 வீதி விளக்குகள் கொள்வனவு செய்யப்பட்டு ஒவ்வொரு வீதிகளுக்கும் பொருத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு