தமிழரசு கட்சி அலுவலகம் முன் போராட்டம்

ஆசிரியர் - Editor I
தமிழரசு கட்சி அலுவலகம் முன் போராட்டம்

ஐனாதிபதி வருகையின்போது கவனயீர்ப்பு போரா ட்டத்தை நடத்திய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத் தை முற்றுகையிட்டு இன்று மாலை போராட்டம் நடத் தியுள்ளனர்.

சென் பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக அமைக்கப்ப ட்ட தொழிநுட்ப நிலையத்தை திறந்து வைப்பதற்கா க ஐனாதிபதி இன்று காலை யாழ்.மாவட்டத்திற்கு வந்திருந்தார்.

இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற வுகள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். எனினும் எவரும் கண்டுகொள் ளவில்லை. மேலும் ஐனாதிபதியுடன் நிகழ்வில் க லந்து கொண்ட தமிழ்   அரசியல் தலைவர்களும் கூட இது தொடர்பாக பேசவில்லை.

இதனை கண்டித்தே காணாமல் ஆக்கப்பட்டவர்களி ன் உறவுகள் மாட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சி யின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் ந டத்தி வருகின்றனர்.



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு