யாழ். அரியாலை முள்ளி பகுதியில் ரயிலுடன் மோதி முதியவர் பலி
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று அதிகாலை பயணிகளுடன் சென்ற ரயிலுடன் மோதி முதியவர் பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம், அரியாலை முள்ளி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் யாழ்.கொழும்புத்துறையை சேர்ந்த செல்லையா கந்தசாமி என்ற 73வயதுடைய முதியவரே பலியானவர் ஆவார்.