யாழ். மீசாலையில் 21 வயது இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: காரணம் இதுதான்!

ஆசிரியர் - Admin
யாழ். மீசாலையில் 21 வயது இளைஞருக்கு ஏற்பட்ட துயரம்: காரணம் இதுதான்!

யாழ். மீசாலைப் பகுதியில் தனியார் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) இரவு-07.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் யாழ். அல்லாரைப் பகுதியைச் சண்முகநாதன் சானுசன் (வயது-21) என்பவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சாவகச்சேரிப் பொலிஸார் குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு