இறைபதமடைந்த விகாராதிபதியின் நினைவு நாளில் ஐனாதிபதி

ஆசிரியர் - Editor I
இறைபதமடைந்த விகாராதிபதியின் நினைவு நாளில் ஐனாதிபதி

இறைபதமடைந்த யாழ்.நாக விகாரையின் விகாரா திபதியின் நினைவு நாளில் ஐனாதிபதி மைத்திரி பால சிறிசேனா கலந்து கொள்ளவுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளது.

யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியின் விஞ்ஞான ஆய்வு கூட திறப்பு விழாவில் கலந்து கொள்ள ஐனா திபதி மைத்திரிபால சிறிசேனா நாளை யாழ்.வருகை தரவுள்ளார். இதனைத் தொடர்ந்து யாழ் நாக விகாரைக்கும் ஐனாதிபதி விஐயம் செய்யவுள்ளார்.

இதன் போது யாழ் நாக விகாரையின் விகாராதிபதியாக நீண்டகாலமாக இருந்து உயிரிழந்த விகாராதிபதியின் நினைவுதின நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே வேளை மேற்படி விகாராதிபதியின் பூதவுடன் யாழ் முற்றவெளி பொது மைதானத்தில் தகனம் செய்யப்படுவதற்கு கடும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறானதொரு நிலையிலையே ஐனாதிபதி அவரின் நினைவு தின நிகழ்வில் நாளைய தினம் கலந்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு