பாடசாலையில் தடுக்கி விழுந்த மாணவர் மரணம்! - சுழிபுரத்தில் சம்பவம்

ஆசிரியர் - Admin
பாடசாலையில் தடுக்கி விழுந்த மாணவர் மரணம்! - சுழிபுரத்தில் சம்பவம்

வட்டுக்கோட்டை -சுழிபுரத்தில் பாடசாலையில் தடுக்கி விழுந்த சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்கும் சுழிபுரத்தை சேர்ந்த பிரபாகரன் கரிகரன் எனும் 8 வயது பாடசாலை மாணவனே உயிரிழந்தவராவர். 

குறித்த சிறுவன் நேற்று பாடசாலைக்கு சென்ற போது அங்கு புத்தகப்பை தடுக்கி கீழே வீழ்ந்துள்ளார். இதன்போது மயக்கமடைந்ததால் பாடசாலை ஆசிரியர்கள் குறித்த மாணவனை உடனடியாக சங்கானை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் சிறுவன் சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும் போதே வழியில் உயிரிழந்து விட்டதாக சங்கானை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து மாணவனது சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னர் மாணவனின் சடலம் பெற்றோரிடம் கையளிக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு