தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை புனரமைப்பு புதுவருடத்துக்கு முன்னர் நிறைவடையும்!

ஆசிரியர் - Admin
தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை புனரமைப்பு புதுவருடத்துக்கு முன்னர் நிறைவடையும்!

தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை புனரமைப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் நிறைவடையும். அதன் மூலம் வடமாகாண நிலத்தடி நீர்வளம் பாதுகாக்கப்படுவதுடன் நன்நீர் வளத்தை பெருக்க முடியும் என வடமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.பிறேம்குமார் தெரிவித்துள்ளார்.

வடமாகாண நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான திட்ட தெளிவூட்டல் கருத்தமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 'மகாவலி மற்றும் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அணைக்கட்டு மற்றும் நீர்வழங்கல் திட்டத்தின் கீழ், உலக வங்கியின் 400 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை திருத்தியமைக்கப்பட்டு வருகின்றது. 1960ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்ட தொண்டமனாறு உவர் நீர் தடுப்பணை யுத்தம் காரணமாக முறையாக பராமரிக்கப்படவில்லை.

இந்நிலையில் நன்நீருடன் உவர் நீர் கலக்கும் அபாய நிலை காணப்பட்டது. தற்போது துருப்பிடிக்காத உலோகங்களால் ஆன கதுவுகள் இடப்பட்ட அணை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத்துக்கு தேவையான பெருமளவிலான நீர் வளத்தை பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு