யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்ட அரச வங்கியின் 80 இலட்சம் ரூபா மாயம்! - ஊழியர்கள் நால்வர் கைது

ஆசிரியர் - Admin
யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்பட்ட அரச வங்கியின் 80 இலட்சம் ரூபா மாயம்! - ஊழியர்கள் நால்வர் கைது

அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்துக்கு எடுத்து வரப்­பட்ட 80 இலட்­சம் ரூபா பணம் திரு­டப்­பட்­டுள்ளது. அரச வங்கி ஒன்­றுக்­காக நேற்­று­முன்­தி­னம் வாக­னத்­தில் இர­க­சி­ய­மாக எடுத்து வரப்­பட்­ட­போதே பணம் காணா­மற்­போ­யுள்­ளது. திருட்­டுத் தொடர்­பான சந்­தே­கத்­தில் பணத்தை எடுத்து வந்த வங்கி ஊழி­யர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குக் காவ­லுக்­குச் சென்ற ஒரு­வ­ரு­மாக நால்­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர்.

பய­ணத்­தின் இடை­யில் தேநீர் குடிப்­ப­தற்­கா­கக் கடை ஒன்­றுக்­குள் சென்று திரும்­பு­வ­தற்­கி­டை­யில் பணம் காணா­மற்­போ­யி­ருந்­தது என்று இந்த நால்­வ­ரும் தமது வங்கி அதி­கா­ரி­க­ளி­டம் முறை­யிட்­டி­ருந்­த­னர். இது குறித்த விசா­ர­ணை­க­ளைக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுப் பொலி­ஸார் ஆரம்­பித்­துள்­ள­னர்.

வங்கி ஊழி­யர்­கள் மற்­றும் பாது­கா­வ­லரே பணத்­தைத் திரு­டி­விட்டு நாட­க­மா­டு­கி­றார்­கள் என்­ற சந்­தே­கத்­தின் பேரி­லேயே பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டனர். எனி­னும் அவர்­க­ளி­டம் இருந்து இது­வ­ரை­யில் பணம் மீட்­கப்­ப­ட­வில்லை. விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.

வங்­கித் தேவைக்கு அவ்­வப்­போது இப்­படி வாக­னத்­தில் பணம் எடுத்து வரப்­ப­டு­வது வழமை. அது­போன்றே அன்­றும் அநு­ரா­த­பு­ரத்­தில் இருந்து 80 லட்­சம் ரூபா பணத்­து­டன் வாக­னம் யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் புறப்­பட்­டது. வாக­னத்­தில் வங்­கிப் பணி­யா­ளர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குப் பாது­காப்­பாக ஆயு­தம் தாங்­கிய காவ­லர் ஒரு­வ­ரும் இருந்­த­னர். 

இடை­யில் தேநீர் அருந்­து­வ­தற்­கா­கக் கடை ஒன்­றின் முன்­பாக வாக­னத்தை நிறுத்­தி­விட்­டுத் தாம் உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்­தால் வாக­னத்­தில் இருந்த பணம் மாய­மாகி இருந்­தது என்று வங்கி ஊழி­யர்­கள் தெரி­விக்­கின்­ற­னர் என்று பொலி­ஸார் கூறி­னர். அவர்­கள் தேநீர் அருந்த எங்கு இறங்­கி­னர் என்­கிற தக­வ­லைத் தெரி­விக்­கப் பொலி­ஸார் மறுத்­து­ விட்­ட­னர்.

பணம் மாய­மா­னதை அடுத்து ஊழி­யர்­கள் உட­ன­டி­யாக யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள வங்கி முகா­மை­யா­ள­ருக்கு அது தொடர்­பில் தக­வல் தந்­த­னர். அவர் யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் உட­ன­டி­யாக முறைப்­பாடு செய்­தார். துரி­த­மாக விசா­ர­ணை­களை ஆரம்­பித்த பொலி­ஸார் பணத்­து­டன் வந்த ஊழி­யர்­கள் மற்­றும் காவ­லரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­னர்.

அவர்­களே பணத்­தைத் திரு­டி­விட்டு நாட­க­மா­டக்­கூ­டும் என்ற கோணத்­தில் பொலிஸ் சந்­தே­கிக்­கின்­றது. பெருந் தொகைப் பணம் திரு­டப்­பட்­டி­ருப்­ப­தால் இது குறித்­துக் குற்ற விசா­ர­ணைப் பிரி­வுப் பொலி­ஸா­ரும் தமது விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­னர். கைது செய்­யப்­பட்­ட­வர்­களை நீதி­மன்­றில் முற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கையை பொலி­ஸார் மேற்­கொண்­டுள்­ள­னர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு