பெற்ற குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய்

ஆசிரியர் - Editor I
பெற்ற குழந்தையை ஆயிரம் ரூபாய்க்கு விற்ற தாய்

பிறந்து சில தினங்களேயான பச்சிளம் குழந்தையை பணத்திற்காக விற்பனை செய் த தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மற்றொரு பெண்ணும் கைது செ ய்யப்பட்டுள்ளனர். 

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து சில தினங்களேயான தனது குழந்தையை மற்றொரு பெண்ணின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவரு க்கு 1000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினடி ப்படையில் பொலிஸார் நடத்திய விசாரணையின்போதே மேற்படி குழந்தையின் தா ய் மற்றும் இடைத்தரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்படி சம்பவம் தொடர்பாக பொலிஸார் கூறுகையில், வவுனியாவை சேர்ந்த குழ ந்தையின் தாய் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒருவருக்கு 1000 ரூபாய்க்கு குழந்தைi ய விற்பனை செய்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் அந்த குழந்தையை வாங்கியவர் 1 லட்சம் ரூபாய்க்கு மற்றொரு வருக்கு அந்த குழந்தையை விற்பனை செய்தமை தெரியவந்துள்ளது. இதனடிப்ப டையில் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. 

மேலும் குழந்தையின் தாய் மற்றும் இடைத்தரகராக செயற்பட்ட மற்றொரு பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் நீதி மன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். 

மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய குழந்தை தொடர்பான முடிவுகள் எ டுக்கப்படும் என பொலிஸார் கூறியுள்ளனர். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு