யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற நகர்சேர் கடுகதி புகைரதம் கனராயன்குளத்தில் விபத்து..! மக்களுக்கு ஆபத்தில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற நகர்சேர் கடுகதி புகைரதம் கனராயன்குளத்தில் விபத்து..! மக்களுக்கு ஆபத்தில்லை..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற நகர்சேர் கடுகதி புகைரதம் கனராயன்குளம் பகுதியில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் யானையுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவிதமான இழப்புக்களும் ஏற்படவில்லை.புகையிரதம் மோதியதில் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் யானையின் உடற்பகுதி புகையிரத பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால் 

புகையிரத பயணம் பல மணி நேரமாக தடைப்பட்டுள்ளது. ஏ9 நெடுஞ்சாலையில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் இவ் விபத்து இடம் பெற்றமையால் பொலீசாரும், இராணுவத்தினரும் 

மக்களது பயண ஒழுங்குகளை சீர் செய்து வருகின்றனர். இவ் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டிருவருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு