யாழ்ப்பாணம்- விடத்தல்பளையில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் பாதுகாப்பாக இன்று வீடு திரும்புகின்றனர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- விடத்தல்பளையில் தனிமைப்படுத்தப்பட்ட 298 பேர் பாதுகாப்பாக இன்று வீடு திரும்புகின்றனர்..!

யாழ்.விடத்தல்பளை பகுதியில் உள்ள 522வது படையினரின் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 298 பேர் இன்று காலை தமது சொந்த இடங்களுக்கு திரும்பியிருக்கின்றனர். 

கொழும்பு - பண்டாரநாயக்க மாவத்தை, வாழைத்தோட்டம் பகுதிகளை சேர்ந்தவர்கள் கொரோனா அச்சம் காரணமாக குறித்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர். 

கடந்த 17 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர்களுக்கு நடாத்தப்பட்ட பரிசோதனைகளில் ஒருவருக்கும் தொற்றில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து 

இன்று காலை தமது இருப்பிடங்களுக்கு திரும்பியுள்ளனர். இதில் 188 ஆண்களும், 110 பெண்களுமாக 298 பேர் தமது தனிமைப்படுத்தலை நிறைவு செய்திருக்கின்றனர். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு