கொழும்பு- வாழைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்..! பணிப்பாளர் தகவல்..

ஆசிரியர் - Editor I
கொழும்பு- வாழைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்..! பணிப்பாளர் தகவல்..

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளா கியிருக்கின்றார். கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியிலிருந்து அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள வர்களில் ஒருவரே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார். 

நேற்று 68 பேருக்கான பரிசோதனை யாழ் .போதனா வைத்தியசாலை ( Teaching Hospital) ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனைக்குட்பட்டவர்களின் விபரங்கள்:

*போதனா வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் - 8 பேர்.

* போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு - 3 பேர்.

* பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் - 45 பேர்.

* யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் - 9 பேர்.

* நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்.

* சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு - ஒருவர்

* ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை - ஒருவர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு