நவீன துட்டகைமுனு கோட்டபாய போர் வெற்றி நாளை கொண்டாடினால் அவருக்கு பதிலடி கொடுக்க தயார்..!

ஆசிரியர் - Editor I
நவீன துட்டகைமுனு கோட்டபாய போர் வெற்றி நாளை கொண்டாடினால் அவருக்கு பதிலடி கொடுக்க தயார்..!

இலங்கை கொரோனா அபாயத்திற்குள் சிக்கியிருக்கும் நிலையில் போர் வெற்றியை கொண்டாட நவீன துட்டகைமுனு ஜனாதிபதி கோட்டபாய முயற்சிப்பாரானால் அதற்கு பதில் நடவடிக்கையில் இறங்க நாங்கள் தயார். 

மேற்கண்டவாறு வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், நவீன துட்டகைமுனு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச போர் வெற்றி நாளை கொண்டாடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதனை அவர் செய்வாராக இருந்தால், 

ஆனையிறவு உள்ளிட்ட பல இடங்களில் தமிழர்களின் வீரம் செறிந்த வெற்றி நாள்க ளையும், இனப்படுகொலை செய்யப்பட்ட நாளையும் நாங்கள் நினைவுகூருவோம். அது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும் என கூறியுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு