இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மீளமைக்கப்படவேண்டும்..! சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மீளமைக்கப்படவேண்டும்..! சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன் கோரிக்கை..

இலங்கையில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் நிலையங்கள் பாதுகாப்பற் றவை என கூறியிருக்கும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன், தனிமை ப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறியவர்கள் பரிசோதிக்கப்படவேண்டும். 

பரிசோதனையில் கொரோனா தொற்றில்லை. என்பதை உறுதிப்படுத்தினாலே தனி மைப்படுத்தலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு 100வீதம் தொற்றில்லை என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில், ஒரு ஊர் மக்கள், ஒரு விமானத்தில் பயணித்தவர்கள் என கூட்டம் கூட்டமாக மக்களை ஒரு கூரையின் கீழ் தனிமைப்படுத் துவது தவறானது. அவ்வாறான நிலையில் 

தொற்றுக்குள்ளாகாதவர்களுக்கு கூட தொற்று ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்கள் மீளமைப்பு செய்யப்படவேண்டும். குறிப்பாக பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 

2ம் முறை அடையாளம் காணப்பட்டவர்களுக்கு 30 நாட்களின் பின்னர் தொற்று அடையாளம் காணப்பட்டது. அவ்வாறு 30 நாட்களின் பின்னர் தொற்று அடையாளம் காணப்படுவது உலகளாவியரீதியில் ஒரு வீதமாகவே நடந்திருக்கின்றது. 

பலாலியில் அடையாளம் காணப்பட்டதைபோல் 10 பேர் அடையாளம் காணப்பட்ட முடியாது. இது பலாலிக்கு மட்டுமல்லாமல் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் எவையும் பாதுகாப்பானவை அல்ல. 

அவை மீளமைக்கப்படவேண்டும். மேலும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேறியிருக்கும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை நடாத்தவேண்டும். அவ்வாறான பரிசோதனையின் ஊடாகவே 

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு தொற்று இல்லை. என்பதை 100 வீதம் உறுதிப்படுத்த முடியும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு