யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! கொழும்பிலிருந்து தப்பிவந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்ட மக்களே அவதானம்..! கொழும்பிலிருந்து தப்பிவந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார்..

அபாய வலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கொழும்பு மாவட்டத்திலிருந்து யாழ்.மாவ ட்டத்திற்கு பாரவூர்த்தி மூலமாக வந்தவர் கொரோனா சந்தேகத்தின் பெயரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார். 

கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் சேர்ந்தவரே சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பொருள்களை ஏற்றி வந்த பாரவூர்தியிலேயே அவர் தப்பி வந்துள்ளார். தகவலறிந்த வலி.மேற்கு சுகாதார மருத்துவ அதிகாரி தலைமையிலான சுகாதார பரிசோதகர்கள், 

அவரைத் தேடிக் கண்டறிந்து வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தியுள்ளனர். பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு