சிறைச்சாலை சுவற்றில் துளையிட்டு தப்பி ஓடிய 3 கைதிகள்..! தப்பி ஓடி சில மணித்தியாலங்களில் வடிவேலு பாணியில் மாட்டினர்..

ஆசிரியர் - Editor I
சிறைச்சாலை சுவற்றில் துளையிட்டு தப்பி ஓடிய 3 கைதிகள்..! தப்பி ஓடி சில மணித்தியாலங்களில் வடிவேலு பாணியில் மாட்டினர்..

நீர்கொழும்பு சிறைச்சாலை சுவரில் துளையிட்டு தப்பி ஓடிய போதைப் பொருள் குற்றவாளிகள் 3 பேர் இன்று காலை பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரே 

இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர். அண்மையில் கைது செய்யப்படும் கைதிகள் அனைவரும் 14 நாட்கள் பிரத்தியேக அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டு

கொரோன வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டதன் பின்பே சிறை அறைகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

அப்படியான சூழ்நிலையில் வைக்கப்பட்டிருந்த மூன்று சந்தேகநபர்களே சிறைச்சாலை சுவரை குடைந்து இன்று அதிகாலை 12.10மணியளவில் தப்பிச்சென்றுள்ளார்.

இதனையடுத்து விரைவாக செயற்பட சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், முப்படையினர் இணைந்து நடத்திய தேடுதலில் இரண்டு கைதிகள் 

சிறைச்சாலை அருகில் உள்ள மைதானத்தில் ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள னர். மேலும் ஒரு கைதி நீர்கொழும்பு கடோல்கெலே பகுதியில் 

அவரது வீட்டில் ஒளிந்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யபட்ட கைதிகள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு