இதுவும் செய்கிறீர்களா..? இனிமேல் செய்யாதீர்கள். கிறிஸ்த்தவ மதபோதனை குறித்து யாழ்ப்பாண ஊடகத்தில் விளம்பரம், கடுப்பான மஹிந்த..

ஆசிரியர் - Editor I
இதுவும் செய்கிறீர்களா..? இனிமேல் செய்யாதீர்கள். கிறிஸ்த்தவ மதபோதனை குறித்து யாழ்ப்பாண ஊடகத்தில் விளம்பரம், கடுப்பான மஹிந்த..

கிறிஸ்த்தவ மதபோதனை ஒன்று தொடர்பாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஊடகம் ஒன் றில் வெளியான விளம்பரம் தொடர்பாக நேற்றய தினம் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தி ல் பிரதமர் மஹிந்த கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

நாம் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். எனது கைகளில் இந்த விளம்பரம் கிடைத்தது. கொரோனா உங்களை நெருங்காது. இவ்வாறு குறிப்பிட்டு யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் செய்து கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளனர்.

இலக்கம் 14 ராசாவத்தை சுதுமலை வீதி மானிப்பாய். ஜெபக் கூட்டம் ஒன்று வருமாறு கூறப்பட்டுள்ளது. இந்த ஜெபக் கூட்டம் காரணமாக யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. 

வடக்கில் பத்திரிகைகளில் இப்படியான விளம்பரங்களை வெளியிட அனுமதிக்க வேண்டாம். குறிப்பாக உங்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். பத்திரிகை உரிமையாளர் யார் என்று எனக்கு தெரியாது, நீங்கள் அவருக்கு ஆலோசனை வழங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு