நாளை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்வு..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..

ஆசிரியர் - Editor I
நாளை காலை 6 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை ஊரடங்கு தளர்வு..! யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இல்லை..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மறு அறிவித்தல் வெளியாகும் வரை ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும். என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு, ஹம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், கண்டி, புத்தளம் ஆகிய 6 மாவட்டங்களுக்கே இந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும். 

இந்த 6 மாவட்டங்கள் தவிர்ந்த 19 மாவட்டங்களில் நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமுலாகும். 

இதேவேளை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து மீள் அறிவித்தல் வரை தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு